11/09/2018

விநாயகர் சதுர்த்தியும் வந்தேறிகளும்...


தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக நடந்துவந்த  விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று களையிழந்து காணப்படுவதற்கு காரணம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தான்...

அவரது மனைவி ஒரு கிறித்துவ பெண்மணி என்பதும், கோவையில் கிறித்துவ பள்ளி ஒன்றை தன் மனைவியின் பெயரில் அவர் தொடங்கியதையும் நான் தட்டிக் கேட்டேன்.

அதன் காரணமாக என் மீது பொய்யான குற்றச்சாட்டு ஒன்றைச்  சாட்டியதுடன் , அவர் இந்து முன்னணியில் இருந்து விலகி, இந்து மக்கள் கட்சி என்று ஒரு கட்சி தொடங்கிவிட்டார்.

இதன் பின்ன்னணியில் பணபலம் பலம் படைத்த  மிகப்பெரிய கிறித்துவ லாபி  இருக்கிறது.

அவர்களின் துணையோடு இந்து விரோதி கருணாநிதியின் ஆட்சியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார்கள்.

விநாயகர் சதுர்த்திக்கு கொண்டாட்டத்தை எந்த அளவுக்கு மட்டுப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு சட்டங்களையும், விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள்.

இன்று விநாயகர் சதுர்த்தியை நாம் ஊக்கமுடன் உற்சாகத்துடனும்  கொண்டாட முடியாமற் போனதற்கு காரணம் கிறித்துவ கைக்கூலி அர்ஜுன் சம்பத் தான்  இந்துமதத்தை அழிப்பதற்கென்றே கிறித்துவர்களால் களம் திறக்கப்பட்டுள்ள ஆள்தான்  அர்ஜுன் சம்பத்.

அர்ஜுன் சம்பத்தின் துரோக முகத்தையும், அவரது மோசடிகளையும் விரைவில் இந்து முன்னணி அம்பலப்படுத்தும்..

இராமகோபாலன்
தலைவர்
இந்துமுன்னணி...

இரண்டு மலையாளிகளும் கேரளாவிற்கு போய் சண்டை போடுங்க கிளம்புங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.