11/09/2018

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம...


கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில்,  பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி கேரள மாநிலம் கொச்சியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பிஷப் ஃபிரான்கோ முலக்கல், தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் பிஷப் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ( face mask )மற்றும் கேட்டாயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். புகார் அளித்து 72 நாட்கள் ஆன பிறகும் அரசோ, காவல்துறையோ, சர்ச் நிர்வாகமோ பிஷப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.