23/10/2018

சேலம் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை வெட்டிக்கொலை செய்து தலையை சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது தோட்டத்தின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் ரிக் வண்டி தொழிலாளி தினேஷ்குமார்.

சாமிவேல் வீட்டிற்கு அரை நிர்வாணத்துடன் வந்த தினேஷ்குமார், ராஜலட்சுமி  கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தார். பிறகு ராஜலட்சுமியின் தலையை துண்டித்து, அதை எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளார். இதனைதொடர்ந்து அங்கு வந்த தினேஷ் குமாரின் மனைவி சாரதா, அவரை அழைத்துச் சென்று ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடையச் செய்தார்.

கொலையாளி சைகோவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இரண்டரை வயது மகன் செல்வதரனீஷை  தினேஷ்குமார் கழுத்து நெரித்து கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.