23/10/2018

கார்ப்பரேட் தண்ணீராக மாறிப்போன கோவை குடிநீர்..


பொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்ன?

தற்போது பொலிவியா (Boliva) நாட்டில் கொச்சபம்மா (Cochabamba) நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள். 1997 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் சிமாபா (SEMAPA) என்னும் அரசு கம்பனிக்கும் பின் இதே சுயஸ் (SUEZ) என்னும் தனியார் நிறுவனத்திற்க்கு வழங்கியது. கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.

இந்நிலையில், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் நிறுவனம். ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள்.

(இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்).

சரி ஆற்றில் தான் தண்ணீர் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், ஆழ்துளை கிணற்றில் (Bore well) தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள். வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த சூயஸ் நிறுவனம் மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து. மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.

வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.