12/12/2018

நீலகிரி மலையில் படுகர் குடியேற்றம்...


கன்னட இனத்தவரான படுகர் நீலகிரியில் குடியேறி ஆக்கிரமித்தது போக தம்மை பழங்குடி என்று அறிவிக்குமாறும் தொடர்ந்து கோரிவருகின்றனர்.

பழங்குடி என்பதற்கான எந்த அம்சமும் இல்லாத இவர்கள் முதலில் திரிந்த கன்னடம் பேசி வந்தனர். தற்போது தனிமொழி பேசுகின்றனர்.

முதலில் கன்னடத்தில் எழுதிவந்த இவர்கள் இப்போது தமிழில் எழுதத் தொடங்கிவிட்டனர்.

இவர்களைச் சுட்டிக்காட்டி நீலகிரி எங்களுக்குச் சொந்தம் என சில கன்னடவர் கூறிவருகின்றனர்.

ஆனால் படகா அல்லது படுகா என்றழைக்கப்படும் படுகர் விஜயநகர ஆட்சி வீழ்ந்த பிறகு 1565 வாக்கில் தெற்கே பரவிய மொகலாய ஆட்சிக்கு பயந்து நீலகிரிக்கு ஓடிவந்த வந்தேறிகள் ஆவர்.

குடியேறி குடியேறி நீலகிரியில் ஒரு பகுதியை தமது வசமாக்கிக் கொண்டனர்.

1812 இல் வெறும் 22,000 பேராக இருந்த படுகர் மக்கட்தொகை 1981 இல் ஒன்றரை லட்சமாகப் பெருகிவிட்டது.

அதாவது 1871இல் 28 படுகருக்கு ஒரு தொதவர் (தமிழ்ப் பழங்குடி) என்ற நிலை இருந்தது.

129 படுகருக்கு ஒரு தொதவர் எனும் அளவுக்கு இவர்கள் மள மளவெனப் பெருகியுள்ளனர்.

பழங்குடிகள் போல தொழிலோ வாழ்வியலோ கிடையாது.

பாதிக்கும் மேலானோர் கிறித்தவ மதத்தைத் தழுவி நகர்ப்புற நாகரீகத்துடனே வாழ்கின்றனர்.

நீலகிரி எனும் நீலமலை தமிழர்களுடன் தொடர்புடைய பழங்குடி மக்களின் பூர்வீக மலை ஆகும்.

சான்று: தமிழகப் பழங்குடிகள் (நூல்)
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.