02/12/2018

பாஜக விற்கு செருப்படி கொடுக்கும் இந்திய விவசாயிகள்...


200 மீட்டர் , 300 மீட்டர் சிலைகள்.

ராமர் கோவில், சபரிமலா பிரச்சனைகள்.

முஸ்லீம் தீவிரவாதம், கிருத்துவ மதமாற்றம் என மத அரசியல்.

நடிகர்கள் அரசியல், அடிமைகளை கொண்டு ஆட்சி.

என எத்தனையோ வகையில் மக்களை திசை திருப்பி வந்த உங்களுக்கு வந்த சவுக்கடி தான் லட்சம் விவசாயிகள் ஒன்றுக்கூடிய இந்த புரட்சி பேரணி.

எங்கள் பேரிடர் நேரங்களில் ஒளிந்துக் கொண்டு, என் விவசாயி தற்கொலை நேரத்தில் வாய் மூடிக்கொண்டு, எங்கள் சிறு குறு தொழில்கள் மூடப்படும் போது கண்டும்காணாது இருந்துக்கொண்டு

அம்பானிக்கும், அதானிக்கும், நாட்டை விட்டு ஓடும் ஏமாற்று பேர்வழிக்கும், நடிகனுக்கும் மட்டும் நேரம் ஒதுக்கி பார்க்கும் அரசே.

பணக்காரனையும், மத தீவிரவாதியையும், வரி ஏய்ப்பு செய்பவனையும் முதலீடாய் கொண்டு டிவி, பத்திரிக்கைகளை வளைத்து இனி நீ செய்யும் எல்லா ஏமாற்று வேலைகளையும் மக்கள் கண்டுக் கொள்வார்கள்.

உன் மற்றும் உன்னை சூழ்ந்து நிற்கும் அடிமை  கூட்டத்தின் அரசியல் முடிவுரை எங்கள் விரல் மையில் எழுதப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.