02/12/2018

வள்ளலார் வணங்கிய முருகபெருமான்...


தன் கவியில் முருகபெருமானை வணங்கச்சொல்லும் வள்ளலார்.

வள்ளலார் கூறும் முருகப்பெருமான் திருவடியை வணங்காவிட்டால் வரும் கேடுகள்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தெய்வமணி மாலையில் கவி-18

"எந்தைநினை வாழ்த்தாத
பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும் வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை
வணங்காத மூடர்தலை
இகழ்விறகு எடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி
காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்த அழுகண்
கடவுள்நின் புகழ்தனைக்
கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎனாப்
பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும் நெஞ்சம்
பரமநின் திருமுன்னர்
குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில்
கந்தகோட்டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி
உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே"

அதிகாலையில் எழுந்தவுடன் "முருகா" என்று சொன்னால் புத்துணர்ச்சியும், தெளிவான அறிவும் கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.