02/12/2018

சொத்துக்காக எனது மகளுக்கு கட்டாய திருமணம்.. அதிர்ச்சியை கிளப்பிய காடுவெட்டி குருவின் மனைவி...


காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

காடுவெட்டி குருவின் அக்கா மீனாட்சிதான் இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.

போலீசில் தஞ்சம் போலீசில் தஞ்சம் இந்த நிலையில் மாலையும் கழுத்துமாக இந்த ஜோடி இன்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டார்கள்.

தாங்கள் இப்படி கல்யாணம் செய்து கொண்டதால் ஊருக்குள் எங்களை விட மறுத்து மிரட்டுகிறார்கள் என்று போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள் சொன்னார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காடுவெட்டி குருவின் மனைவி லதா அடுத்த பகீரை கிளப்பியுள்ளார். இவ்வளவு நாள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் பெற்றோர் வீட்டிலிருந்த லதா, இன்று நேராக காடுவெட்டி கிராமத்துக்கு வந்துவிட்டார். அங்கு குருவின் சமாதியில் உட்கார்ந்து மகளின் திருமணத்தை பற்றி சொல்லி அழுது புலம்பினார்.

பின்னர் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடமும் லதா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது...

விருப்பமில்லாத திருமணம் எனக்கு எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் எனது மகள் விருத்தாம்பிகைக்கும் எனது கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவ்வாறு லதா தெரிவித்தார்.

ஒரு பக்கம் திருமணம் நடந்து மகள் போலீஸ் ஸ்டேஷனே போய் புகார் கொடுத்துள்ள நிலையில், விருப்பமே இல்லாமல் மகளின் திருமணம் நடந்துள்ளது என்று லதா கூறியுள்ளது இன்னும் அதிகமான குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.