12/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 11...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனத் தொடரானது இனி பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்ட உள்ளது. அப்பொழுது தான் மக்கள் இதன் உண்மைத் தன்மைகளை முழுமையாக புரிந்து கொண்டு, இதன் நம்பகத் தன்மையின் மேல் மிகுந்த அக்கறை கொள்வார்கள்.

உலகத்தில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்ற கேள்வி மக்களின் மனதில் எழலாம். இது இயற்கையானதே. வரும் துன்பங்களை கண்டு, கண்டு சளித்துப்போன மக்களுக்கு இதுவரை காணாத பல சம்பவங்களின் நிகழ்வுகளைப்பற்றி இந்த தீர்க்க தரிசனத்தின் வாயிலாக அதனை அறியும்பொழுது அவர்களால் இதனை ஏற்றுக்கொள்வது என்பது அசாதாரன விஷயமாகும்.

ஆனால் இந்த பதினொன்றாம் தீர்க்க தரிசனம் இது போன்ற நிகழ்வுகள் விரைந்து நடக்கப்போவதாக கூறுகின்றன.

11-ம் தீர்க்க தரிசனம் இங்கு எதைப்பற்றி கூறுகிறது என்று சற்று ஆழ்ந்து கவனிப்போம். அதாவது கலியுகக்கடவுளான  ஸ்ரீ முருகப்பெருமானின் அற்புதங்கள் தமிழ்நாட்டில் துவங்கிட உள்ளதாகவும், அது சமயம் ஸ்ரீ போகர் என்ற சித்தரின் வருகையும் அவரின் அற்புதங்களும் தென்தமிழகத்தில் நிகழ உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது.

ஸ்ரீ போகர் என்ற மகா சித்தர் தனது தவ வலிமையால் உருவக்கப்பட்ட ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சவடிவமான ஸ்ரீ தண்டாயுதபாணி எனும் நவபாஷான சிலைகள் மொத்தம் இரண்டு என்றும்,


தற்பொழுது  ஒரு சிலை மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்றும்,

மற்றொரு நவபாஷான சிலை கேரளத்தில் மிக, மிக பாதுகாப்பான முறையில் ஒரு குகையில் வைக்கப்பட்டு பராமரித்து வரப்படுகின்றது என்றும்,

இந்த சிலையின் இரகசியம் தற்சமயத்தில் கேரளத்தில் இருந்தே ஒரு நம்பூதிரியால் வெளிப்படுத்தப்படும் என்றும் 11-ம் தீர்க்க தரிசனம் ஒரு அற்புதமான தீர்க்க தரிசனத்தை எடுத்துக்கூறுகிறது.

இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட அதாவது ஸ்ரீ போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷான சிலை மீண்டும் தமிழகத்திற்கு முறையாக கொண்டு வரும் சமயத்தில் தமிழ்நாட்டில் அறிய பல சம்பவங்கள் நடைபெறும் என்றும்,

அது மட்டுமின்றி ஸ்ரீ முருகப்பெருமானின் அற்புதங்களை மக்கள் காணும்படி அமைய உள்ளதாக தீர்க்க தரிசனங்கள் ஒரு உண்மையை எடுத்துக்கூறுகின்றன.

திருச்செந்தூரில் உள்ள கடலானது உள்வாங்கி மூன்று நாட்களுக்கு பிறகே பழைய நிலைக்கு  திரும்பும் என்றும்,

அச்சமயத்தில் இருந்தே 11-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் நிகழ்த்துவங்கும் என்றும், இந்த கடல் உள்வாங்கும் சம்பவம் ஒரு பெளர்னமி அன்று நடபெறும் என்று 11-ம் தீர்க்க தரிசனம் சில உண்மைகளை இங்கு எடுத்துக் கூறுகிறது.

மேலும் 11-ம் தீர்க்க தரிசனம் நடந்து முடியும் சமயத்தில் இந்திய அரசலமைப்பில் ஒரு மாற்றம் நிகழும் என்றும் அந்த தீர்க்க தரிசனம் மேலும் எடுத்துக்கூறுகிறது.


கலியுகக் கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானின் சந்நதி ஒன்றில் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், அது தைத்திங்கள் அன்று நடைபெறக்கூடிய நிகழ்வு என்றும் 11-ம் தீர்க்க தரிசனம் மேலும் எடுத்துக் கூறுகிறது.

மேலும் இச்சமயத்தில் தமிழக அரசியலில் பல திருப்பங்களும், மாற்றங்களும் ஏற்படும் என்றும், இது மக்களிடையே சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு நிகழ்வாக அமையும் என்று 11-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் ஒரு நிகழ்வுப்பற்றி எடுத்துக்கூறுகிறது.

தமிழகத்தின் மிக தொன்மையான கல்வெட்டு ஒன்று தஞ்சை மண்ணிலிருந்து கிடைக்கப்பெறும் என்றும்,

அந்த கல்வெட்டில் உள்ள குறிப்பை தமிழ் வல்லுநர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் கண்டறிந்து வியந்து நிற்பார்கள் என்றும்,
அந்த நாளிலிருந்து மூன்றாம் தினத்தன்று 11-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் துவங்குவதற்கான பொற்காலம் என்றும்,

இதுவே 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட நிகழ உள்ளதற்கான ஆதாரமாக மக்கள் கொள்ள வேண்டும் என்று தீர்க்கதரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.

காலத்தால் அழியாத காவியம் ஒன்று தமிழகத்தில் கூடிய விரைவில் உருவாகிட உள்ளதாக மேலும் சில தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.

இந்த காவியத்திற்கு ஆதிசக்தியின் பிரபஞ்சம் வியக்கும் அதிசயம் என்று பெயரிடப்படும் என்று தீர்க்க தரிசனம் மேலும் சில உண்மைகளை கூறுகிறது.

பன்னாட்டு அறிஞர்கள் ஒன்றுகூடி தமிழகத்திற்கு வருகை தந்து உலக அளவில் ஒரு புதுமையை படைத்திட கைகோர்ப்பார்கள் என்றும்,

அது தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் நடைபெறும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் சில உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.

நவகோள்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும் சம்பவம் ஒன்று வானத்தில் அதிசயமாக நிகழ உள்ளது என்றும், அச்சமயத்தில் பூமியில் பல மாற்றங்களும், அழிவுகளும் ஏற்படும் என்றும்,

இதனை விஞ்ஞானிகளே முன்னறிவிப்பு செய்வார்கள் என்றும் மேலும் ஒரு தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

எகிப்திய பிரமீடு உள்ள பகுதியில் ஒரு பேரழிவு நடைபெறும் என்றும், அச்சமயத்தில் பூமியில் ஏற்கனவே புதையுண்டுள்ள ஒரு அதிசய மிக்க பிரமீடு வெளிவரும் என்றும்,

அந்த பிரமீட்டில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும், கடவுள் உருவங்களும் காணப்படும் என்றும்,

இதனை தேடித்தான் நமது முன்னோர்கள் அங்கு சென்றார்கள் என்ற உண்மையை உலகமே அறிந்து வியக்கும் என்றும்,

அங்குள்ள பொக்கிஷங்கள் சில காலத்திற்கு பின் இந்தியாவிற்கு வந்து சேரும் என்றும் மற்றொரு தீர்க்கதரிசனம் சில உண்மைகளை எடுத்துக்கூறுகிறது.

ஸ்ரீ கண்ணன் வாழ்ந்த துவாரகை மிகப்பெரிய வரவேற்பை பெற உள்ளது என்றும், அங்கு மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணனின் அற்புதங்கள் துவங்கிட உள்ளது என்றும்,

அது நிகழ்வதற்கு முன்பாக ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் இந்திய மாநிலங்கள் முழுவதும் வெளிப்படும்படியான பல அதிசய நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்க தரிசனத்தின் கோட்பாடுகள் மேலும் சில நிகழ்வுகளை எடுத்துக்கூறுகிறது.

மேலும் தமிழகத்தில் இனி பல அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பல அதிசயங்களை தமிழகம் சந்திக்க உள்ளதாகவும் அது எடுத்தக்கூறுகிறது.

பூலோக அமைப்பில் வட, தென் துருவங்களில் மாபெரும் மாற்றங்கள் நிகழ உள்ளதாகவும், அதன் காந்தப் புலத்தன்மையில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும்,

இது உலக விஞ்ஞானிகளுக்கு கவலை அளிக்கும் என்றும், அச்சமயத்தில் உலகில் மிகப்பெரிய அதிசயமொன்று நடைபெறும் என்று 11-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ள உப தீர்க்க தரிசனங்கள் மேலும் சில உண்மைகளை எடுத்துக் கூறுகின்றன.

மேற்கண்ட தீர்க்க தரிசனங்கள் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும், அது நிகழும் காலம் மிக, மிக சமீபமாக உள்ளது என்றும்,

அச்சமயத்தில் உலக மக்கள் தீர்க்க தரிசனத்தின் மீது கொள்ளும் நம்பிக்கை அகாயத்தில் ஒரு ஒளி போன்று பிராகசிக்கும் என்று தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.