15/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 16...


தீர்க்க தரிசனத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணரும் காலமாக இனி வரும் உலகியல் நிகழ்வுகள் அமைய உள்ளதாக கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

உலகத்தின் மாற்றம் என்பது ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கையில் உருவாகும் நல்ல மாற்றமே அதுவாகும்.

காலத்தின் கோலத்தை கண்ணுற்று, உலக மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

தீர்க்க தரிசனத்தின் உண்மைகளை அது நிகழும் சமயத்தில் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும்.

ஆனால் ஒரு தீர்க்க தரிசனம் நிகழ்வதற்கு முன் ஏற்படும், அதாவது நிகழும் சம்பவங்களை பற்றி முன்கூட்டியே இந்த தொடரில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.


அவைகளை கண்ணுற்று மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

உலகமே காலப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ள போது, அதன் நிகழ்வுகளும் அதன் வழியிலேயே பயணம் செய்கின்றன என்று மக்கள் உணர வேண்டும்.

அதே போன்று தீர்க்க தரிசனத்தின் வாயிலாக உலக நடப்புகளை முன் கூட்டியே மக்கள் அறிய வேண்டும் என்பது காலப் பயணத்தின் முக்கிய விதியாகும்.

சதிகாரர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அழிவுச் சம்பவத்திற்கு திட்டமிடுவார்கள் என்றும்,

அது நிகழ்வதற்கு முன் அந்த அமைப்பு பகிரங்கமாக ஒரு அறிக்கையை அந்த நாட்டிற்கு வழங்கும் என்றும்,

இந்த அறிவிப்பால் அந்த நாடு எச்சரிக்கையாக இருக்கும் பொழுது மற்றொரு நாட்டில் அந்த சதிகார அமைப்பு தனது திட்டத்தை செயல்படுத்தி விடும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கையை செய்கிறது.


அத்தகைய சதிச் செயலானது விமானம் போன்ற வடிவத்தில் வந்து முடிவடையும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

16-ம் தீர்க்க தரிசனம் நடந்து முடியும் பொழுது உலக நாடுகளே அச்சப்படும் என்றும்,

அச்சமயத்தில் உலகத்தின் ஒரு மூலையிலிருந்து எழும்பும் சக்தி வாய்ந்த ஒன்று அந்த சதிகாரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும்,

அந்த சக்தியானது மற்ற நாடுகளின் ஒருங்கிணைப்பு என்பதை உலக மக்கள் கண்டு வியப்படைந்து பாராட்டுவார்கள் என 16-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது.

16-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக தென் சீனாவில் மிகப்பெரிய அழிவுச் சம்பவம் நடைபெறும் என்றும் அது இயற்கையின் சக்தியால் நிகழக்கூடிய கொடிய சம்பவம் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பைத் தருகிறது.

இந்திய - சீன நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தும் அளவிற்கு சீன நாட்டின் எல்லை தாண்டும் பிரச்சனைகள் இனி அதிகமாக நடைபெறும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் கூறுகிறது.

மக்கள் மன்றத்தில் ஒரு புதிய பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மக்கள் முறையிடும் வினோத சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடைபெறும் என்றும்,

இது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்று மற்றொரு தீர்க்க தரிசன குறிப்பு எடுத்துக் கூறுகிறது.


தமிழகத்தில் பூமி பிளவுபடும் சம்பவம் ஒன்று மிக அருகில் நடக்கப் போவதாக மற்றொரு இறை தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

இந்த விளைவானது மக்களிடையே பல்வேறு அச்சங்களையும், கேள்விகளை எழுப்பும் என்றும் அந்த தீர்க்க தரிசன குறிப்பு சில விபரங்களை எடுத்துக் கூறுகிறது.

தமிழகத்தில் திடீரென்று பல அமைப்புகள் ஒன்று கூடி ஒரு விழா எடுப்பார்கள் என்றும்,

அந்த விழாவின் மூலம் பல இறை அனுபவங்களை மக்கள் அடையப் போகிறார்கள் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் குறிப்பை தருகின்றது.

தருமபுரி மாவட்டம் குறிப்பில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையில் இனி பல அதிசய சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், அதுவே இறைவன் வருகைக்கான முன் அறிவிப்பாக இருக்கும் என்றும்,

உலக மக்களை இச்சம்பவமே இங்கு அழைத்து வரும் என்று 16-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மலை வாழ் மக்களிடத்தில் ஒரு தெய்வீக அதிசய நிகழ்வு ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும் அந்த குறிப்பு மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.

மற்றொரு உலகிலிருந்து மனிதனை நோக்கி ஒரு அதிசயம் வர உள்ளதாகவும், இந்த பூமியே அதிசயித்து நிற்கும் சம்பவமாக அது அமைய உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனம் எடுத்து கூறுகிறது.

தீர்க்க தரிசனங்கள் மெய்பட போகும் நாட்கள் வந்து விட்ட நிலையில் பல தீர்க்க தரிசிகள் திடீரென்று தோன்றி பல குறிப்புகளை வெளியிடும் சம்பவம் இந்த 16-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக நடக்கும் என மற்றொரு தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

மேலும் பூமியில் பல அதிசயங்கள் நடக்கும் காலகட்டமாக இந்த 16-ம் தீர்க்க தரிசனக் காலம் இருக்கும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் குறிப்பைத் தருகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை..

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.