15/04/2017

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்...


பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்!
பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்!

என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை நாம் பாராட்டுகிறோம். போற்றுகிறோம். தான் ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

எப்படி? இதோ...

அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை.

ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.

அதேபோல், வீரமணியிடம் ஒருவர், பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டுமென்று மேடை தோறும் முழங்குகிறோம். ஆனால் மனைவி தன் பெயருக்கு பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து போட்டுக்கொள்வது எதற்கு? அதுபோன்று ஆடவர், மனைவி பெயரை சேர்த்து போட்டுக்கொள்வது இல்லையே ஏன்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வீரமணி பதில் கூறும் போது, மனைவி என்பவர் கணவனின் (ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் அப்படி நடக்கிறது என்று கூறுகிறார்.
(நூல்:- வீரமணி பதில்கள்)

அதாவது மனைவியின் பெயருக்கு முன்னால் கணவனின் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது மனைவி என்பவர் கணவனின் அடிமை என்பதற்காகத்தான் என்று வீரமணியே அடித்துக் கூறிவிட்டார். வீரமணியின் சொல்படி பார்த்தால், ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் திருமணத்திற்குப் பிறகு (இரண்டாவது திருமணத்திற்கு பிறகு) மு. ஹ. மணிம்மை (மு. அரசியல்மணி) என்று இருந்துவந்த பெயரை தன்னுடைய பெயரையும் சேர்த்து அதாவது ஈ.வே. ராமசாமி மணியம்மை என்று தமிழிலும், நு. ஏ. சு. மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே-இது மனைவி என்பவர் கணவனின்(ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடந்ததுதானே! வீரமணியின் பதில்படி இது ஆணாதிக்க மனோபாவமா? இல்லையா?

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா?

தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது?

மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த ஈ.வே. ரா. தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாமே! அது தானே முற்போக்கு. ஏன் அவ்வாறு செய்யவில்லை?

தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், கெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ! யாருக்குத் தெரியும்?

ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ. அவர்களுக்கே வெளிச்சம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம் ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள பல வழீகளைக் கூறியுள்ளார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-

பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்).

இவ்வாறெல்லாம் பெண்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார்.

இந்த அறிவுரைகள் எல்லாம் தன்னுடைய திராவிடக்கழகத்தினுடைய தோழிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பிக்கைக் கொண்டு நமக்கு எழுந்த சந்தேகங்களை கேட்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்னரே ஈ.வே. ராமசாமி நாயக்கர்-

ஏன் மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா போடவில்லையே?

புடவையே தேவை இல்லை என்று சொல்லிவிட்டாரே-

ஏன் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தார்கள்? இன்றும் இருக்கிறார்களே ஏன்?

கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று சொன்னாரே-

பின் ஏன் மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர்? ஏன் இன்றும் வைத்திருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மீது அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி செய்யவில்லை? இதுதான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை – அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடித்தாரா? இல்லையே!

தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்திருக்கலாமே! நீங்கள் தான் புரட்சிவாதிகளாயிற்றே! முற்போக்காளர்கள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களாயிற்றே!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது முற்போக்கு கருத்து அல்ல என்று கடைபிடிக்கவில்லையா? அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற காரணமா?

எந்தக் காரணமாக இருந்தாலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை என்று நாம் நம்பலாம்.

நம்முடைய இந்த நம்பிக்கை பொய் என்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி இவர்கள் ஏன் கடைபிடிக்கவிலலை என்பதை விளக்குவார்களா திராவிட கழகத்தவர்?

ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

ஆனால் தம்முடைய திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி வைத்தார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதுதானே! ஆனால் இவர்களே பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக்காட்டத்தானே! திராவிடர் கழகத்திலே மகளிரணி என்று பிரித்தவர்களுக்கு பெண்களும், ஆண்களும் ஒரே மாதிரிதான் என்றுச் சொல்ல அருகதை உண்டா?

தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை?

திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கலாமே! பெண்ணடிமை விலக வேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால்தானே இவர்கள் இந்த விதியை சேர்ப்பதற்கு என்ற எண்ணம் அல்லவா நமக்கு தோன்றுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.