11/04/2017

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்ற கிளைக்கு உள்ளதா , சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி...


செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துள்ளனர், மேலும் ஒரு அமைச்சர், சசிகலா ஆணைப்படி தான் தமிழக அரசு நடைபெறுகின்றது எனக் கூறியுள்ளார். இது அவர்கள் ஏற்ற அரசியல் சாசன உறுதி மொழிக்கு எதிரானது.

எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், இவர்களை தகுதி நீக்கம் செய்யாத முதலமைச்சரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தான் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. மேலும் சபாநாயகர் இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.