11/04/2017

தென்னிந்தியர்கள் இந்தியர்களா.. இல்லையா... தனி நாடு கோரிக்கை வரும் என எச்சரிக்கை...


தென்னிந்தியர்கள் குறித்து முன்னாள் எம்பி தருண் விஜய் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது.

தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களா இல்லையா என அரசு விளக்கமளிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசமாக வாதிட்டார்.

தென் மாநிலங்களை பற்றி தவறாக குறிப்பிட்ட தருண் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்கே முழங்கினார்.

இது போன்ற பேச்சுக்களை அனுமதித்தால் தென் மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல முற்படும் என்றும் கார்கே எச்சரித்தார்.

கார்கே பேச்சுக்கு எதிர்கட்சிகளி‌ன் மற்ற எம்பிக்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் பாகுபாடு தொடர அனுமதிக்கப் போவதில்லை என உறுதியளித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.