10/12/2017

ஆம்புலன்ஸ் தராததால், தனது மகள் உடலை பைக்கில் கட்டி எடுத்துச் சென்ற நபர்...



ஜார்கண்ட் மாநிலத்தின் கோண்டா மாவட்டம் பெலாகரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவ் ஷா, இவரது 12 வயது மகள் லலிதா குமாரி, இவர் கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததால் ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் அன்றே, உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் லலிதா குமாரி பலியானார். இதனையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகம் முன்வரவில்லை.

இதனால், மகாதேவ் தனது மகள் உடலை பைக்கில் கட்டி தனது கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை இது சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.