10/12/2017

சேகர் ரெட்டி டைரியில் திமுக மாவட்ட செயலாளர்: ராஜினாமா செய்ய சொல்வாரா திமுக மு.க. ஸ்டாலின்?



சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் அம்பலமாகியுள்ளது. அந்த டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என திமுகவின் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அதே டைரியில் திமுகவின் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை காந்தி - சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மையை மறைத்து நாடகம் ஆடுகிறார் மு.க. ஸ்டாலின்.

அதிமுக ஊழல் அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் வைக்கும் அதே ராஜினாமா அளவுகோள் திமுக கட்சியின் ஊழல் மாவட்ட செயலாளருக்கு பொருந்தாதா?

சேகர் ரெட்டியிடம் 7 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, சேகர் ரெட்டி டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள திமுக மாவட்ட செயலாளர், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி பதவி விலக வேண்டும் என மு.க. ஸ்டாலின் உத்தரவிடுவாரா? திமுக எம்.எல்.ஏ காந்தி மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்வாரா திமுக செயல்தலைவர்?

தனக்கு வந்தா ரத்தம், அடுத்துவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஊழலுக்கு எதிராக நாடகம் போடும் மு.க. ஸ்டாலின் முதலில் தனது கட்சியின் ஊழல் மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்க முன்வர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.