28/03/2018

காஷ்மீர் நாள் 627...


புல்வாமா மாவட்டத்தில் உள்ள Tahab பகுதிக்குள் நேற்று நள்ளிரவு நுழைந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, வீட்டில் இருந்த பொது மக்களை தாக்கியதோடு, பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர்.

இராணுவத்தின் இந்த அயோக்கியத்தனத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள Sopore பகுதிக்குள் நுழைந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறிய தேடுதல் வேட்டையை நடத்தியது, இந்த அத்துமீறிய தேடுதலை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களின் மீது இராணுவம் கடுமையான கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று இரவு சோபூர் மற்றும் ஹஜின் பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்திய இந்திய இராணுவம், அப்பாவி காஷ்மீரிய இளைஞர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள Lachipora Uri பகுதியில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்தில் கிட்டத்தட்ட நான்கு குடியிருப்புகள் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ள...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.