22/07/2018

வேற்றுகிரக இரத்த உறவுகள்...


மனித இனத்தின் தோற்றம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை
எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.

இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா?

மதங்கள் கடவுள்கள் என்ற ஓர்
கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா?

இவை மிகப்பெரிய கேள்விகளே.

சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.

மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.

வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக் கிரகவாசிகளுக்கு., அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.

அதற்காக ஆரம்பகால பூமியில்
புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து
அவற்றின்  மரபணுக்களோடு, தமது இரத்த வகை மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாலர்கள்அடித்துக் கூறுகின்றார்.

இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.


உதாரணமாக மனிதர்கள் நான்கு சாத்தியமான பொதுவான இரத்த வகையினால் பிரிக்கப்படுகின்றனர் : ஏ, பி, ஏபி மற்றும் ஓ விஞ்ஞானிகளின் படி மனித உடலின் மேற்பரப்பில் காணப்படும் புரதங்கள் தான் மனித உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து
போராடுகின்றன..

இந்த கிரகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அம்மாதிரியான புரதங்களை கொண்டுள்ளன. அதாவது அவர்கள் ஆர்எச் பாசிடிவ் கொண்டுள்ளன,

மறுபக்கம் வெகு சிலரே ஆர்எச் நெகடிவ்
கொண்டுள்ளன அதாவது குறைந்த அளவிலான புரதம் கொண்டவர்கள்.

இந்த இரண்டு வித்தியாசமான புரதங்கள் பற்றி பல ஆண்டுகளாய் ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும்
நிலையில் மிகவும் விசித்திரமான கோணத்தில் புதிய சர்ச்சை ஒன்று
கிளம்பியுள்ளது...

புதிய சதியாலோசனை கோட்பாடு ஒன்று, பூமி கிரகத்தில் உள்ள ஆர்எச் நெகடிவ் கொண்டவர்கள் எல்லாம் வேற்றுகிரக பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது.

இதன் மூலம் ஆர்எச் பாசிடிவ் மற்றும் நெகடிவ் சார்ந்த ஒரு கவர்ச்சிகரமான விடயத்தை கண்டுபிடித்து விட்டதாக
விஞ்ஞானிகள் நம்புகின்றன.

ஆய்வின்படி, தொலைதூரம் கடந்து பூமிக்கு வந்த  வேற்றுகிரக மனிதர்கள் 'மரபணு கையாளுதல்' மூலம்
உருவாக்கப்பட்டது தான் ஆர்எச் நெகடிவ் வகை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மரபணு கையாளுதல் ஆனது அடிமைகள் இனத்தை உருவாக்கவே நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் வழங்கியுள்ளன.

மேலும் இது சார்ந்த விசாரணையின் கீழ், ஆர்எச் பாசிடிவ் தாய்மார்களால் ஆர்எச் நெகடிவ் வகையால் உருவாக்கம் பெற்ற கருவை பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் - இந்த தீவிமான,
சகிப்பின்மை உருவாக ஆர்எச் நெகடிவ் ஒரு பண்டைய மரபணு மாற்றம் பெறப்பட்டதால் தான் என்று நம்பப்படுகிறது.

ஆர்எச் பாசிடிவ் மற்றும் ஆர்எச் நெகடிவ் ஆகிய இரண்டு வகையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்ளாமல் ஏன்
ஒன்றை ஒன்று எதிர்கிறது என்பது புரியாத புதிராகவே தான் உள்ளது.

சம்பந்தப்பட்ட கோட்பாடானது,
அண்டத்தில் இருந்து எங்கிருந்தோ பூமியின் பண்டைய சுமேரியாவிற்கு வந்த மிகவும் மேம்பட்ட அன்னிய இனம், பண்டைய மெசோபோடோமியன் பண்பாடுகளின் தெய்வங்கள் என்று நம்பப்படும் அனுனாகி (Anunnaki) வரையிலாக ஆய்வு செய்துள்ளது.

அதன் மூலம் வேற்றுகிரக வாசிகள் திட்டமிட்டே பழமையான மனித இனங்களில், மிகவும் பலமான மற்றும் போதுமான உடன் மிக தூரம் கடந்து செல்லும் வகையிலான அடிமைகளை உருவாக்கும் மரபணு மாற்றங்களை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆய்வாளர்கள்
சந்தேகின்றனர்.

கிரகத்தில், ஸ்பெயின் மற்றும்
பிரான்சின் பாசுக்கு மக்கள் இந்த ஆர்எச் நெகடிவ்தனை அதிக சதவிகிதம் கொண்ட மக்கள் என்பது
குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.