22/07/2018

சிக்கலை சிரித்தனுப்புங்கள்...


மெளனமாக உட்காருங்கள்,
உங்கள் இருத்தலின் துணிவின்மீது ஒரு அசட்டுச்சிரிப்பை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

ஏதோ உங்கள் முழுஉடலுமே அசட்டுச்சிரிப்பில் இருப்பதைப்போல உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சிரிப்போடு அசையுங்கள். அது வயிற்றின் மேல்புறத்திலிருந்து முழுஉடலுக்கும் பரவட்டும். – கைகள் சிரிக்கட்டும், அதை ஒரு கிறுக்கத்தனமாக செய்யுங்கள்.  ஒரு இருபதுநிமிடங்கள் சிரியுங்கள்.  அது உரத்த சிரிப்பாக இருந்தாலும்கூட அதை அனுமதியுங்கள்..

அது சத்தமில்லாமல் வந்தால், சிலசமயங்களில் அமைதியாக, சிலசமயம் சத்தமாக, எப்படியும் அதை அனுமதியுங்கள். ஆனால் ஒரு இருபதுநிமிட சிரிப்பை அனுமதியுங்கள்.

பிறகு மண்ணிலோ அல்லது தரையிலோ
படுத்துக்கொள்ளுங்கள். தரையை பார்த்தபடி, தரையில் படுத்துக் கொள்ளுங்கள்.

சூழல் வெதுவெதுப்பானதாக இருந்தால், உங்கள் தோட்டத்தின் தரையில் செய்யலாம்.. அது நல்லது. 

நிர்வாணமாக செய்ய முடிந்தால், அது இன்னும் நல்லது.

பூமியோடு தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தபூமி உங்கள் தாய், நீங்கள்
அதன் குழந்தை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைப்பிலேயே கரைந்து செல்லுங்கள்.

இருபதுநிமிடம் சிரிப்பு, இருபதுநிமிடம் பூமிபடர்வு, பூமியோடு ஒரு ஆழ்ந்த தொடர்பு.  பூமியோடு சுவாசம், பூமியாகவே உணருங்கள். 

நாம் மண்ணிலிருந்து தான் வந்தோம். ஒருநாள் அங்கேதான் போகப் போகிறோம்.

இப்படி ஒரு இருபதுநிமிட போஷாக்கேற்றலுக்குப் பிறகு – காரணம் பூமி உங்களுக்கு நிறையசக்தியைக் கொடுக்கும், – நீங்கள் இப்போது ஆடும் போது அதற்கு ஒரு பெரியசுவை இருக்கும். இப்படி இருபது நிமிடங்கள் நடன மாடுங்கள்…

எந்த ஆட்டமானாலும் சரி. இசையை போட்டு நடனமாடுங்கள்.

வெட்பநிலை மோசமாக இருந்தால்,
அறையிலேயே இதைச்செய்யலாம்.

ஆனால் நல்ல வெளிச்சமாக இருந்தால், வெளியே செய்யுங்கள், அங்கே சில்லென்று இருந்தால் ஒரு போர்வையை போர்த்திக்கொள்ளுங்கள்.

இதைச் செய்ய ஏற்ற வழிகளையும், முறைகளையும் கண்டறியுங்கள், ஆனால் தொடர்ந்து செய்யுங்கள். ஆறு அல்லது எட்டுமாதத்திற்குள் நீங்கள் பெரிய மாற்றங்கள் தன்னால் ஏற்படுவதை காண்பீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.