22/07/2018

டெஸ்லாவின் வேற்றுகிரகவாசி தொடர்பு...


19-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும், 20-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும்
நிகோலா டெஸ்லா நிகழ்த்திய
கண்டுபிடிப்புகளும், அவரின்
படைப்பாற்றலும், யோசனைகளும் மிகவும் அசாத்தியமானவைகளாய்
இருந்தன. மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு புதுமையான மனிதராக டெஸ்லா திகழ்ந்தாரோ அவ்வளவக்கு அவ்வளவு மர்மங்களையும் தன்னுளகொண்டு
வாழ்ந்தார் என்பதும் நிதர்சனமே..

டெஸ்லா - இந்த நாகரீகத்தின் மிக அற்புதமான கண்டுபிடிப்பாளராய்
திகழ்ந்தார் அதற்கு காரணம்
அவரின் தற்காலம்-எதிர்காலம்
ஆகியவைகளையும் தாண்டிய
சிந்தனைகளும், ஆராய்ச்சிகளும் தான். வருங்காலம் தாண்டிய நிகோலா டெஸ்லாவின் எண்ணங்கள் அவருக்கு சாத்தியம்தானா..? அல்லது அவர் செய்தவை யாவும், உண்மையில் பூமி கிரகம் இன்றி வேறு கிரகத்தில் வாழும் மிக முன்னேறிய ஜீவராசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளா என்ற குழப்பமும் சந்தேகமும் உள்ளன.

அதற்கு மிகவும் பலமான ஒரு ஆதாரம் தான் அவர் உருவாக்கிய மிகவும் மர்மமான கண்டுபிடிப்பான  (Flying Saucer) இன்னும் தெளிவாக சொன்னால் அடையாளம் காணப்படும் பறக்கும் தட்டு (IFO -‘Identified' flying object). நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு ,
இருபதாம் நூற்றாண்டின் முதல்
பத்தாண்டுகளில் டெஸ்லா ஒரு
விசித்திரமான விமான காப்புரிமையை விண்ணப்பித்தார், அது "மனிதனால் உருவாக்கப்படும் உலகத்தின் முதல் பறக்கும் தட்டு..


மிகவும் சுவாரசியமான முறையில் பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட சாட்சிகளின் கருத்தின்கீழ் இந்த டெஸ்லாவின் ப்ளையிங் சாசர் டிசைன் உருவானது. அந்த வடிவமைப்பில், பறக்கும்தட்டின் உந்துதல் வழங்க மற்றும் பறக்க போதுமான அளவு மின்தேக்கி,
பின்பு பறக்கும் தட்டின் திசையை கட்டுப்படுத்த சிறிய மின்தேக்கிகள், உடன் கைரோஸ்கோப்
உறுதிப்படுத்துதல் அமைப்பு
மற்றும் மின்சார இயக்கி கட்டுப்பாடு ஆகியவைகளும் அடக்கம்.

உட்புறம் மிகபெரிய பிளாட் திரைகள் மற்றும் விமானிகள் காண முடியாத திசைகளான ப்ளைண்ட் ஸ்பாட்ஸ்களுக்காக வெளிப்புற வீடியோ கேமராக்கள் என அந்த ப்ளையிங் சாசர் வடிவமைப்பு கிட்டத்தட்ட அதிநவீன வருங்கால விமானத்தின் ஒரு முன் மாதிரியாக இருந்தது என்றே கூறலாம். டெஸ்லாவின் பறக்கும் தட்டிற்கு கண்கள் உண்டு என்றே கூறலாம்.

ஏனெனில் அதில், மின் ஆப்டிகல் லென்ஸ்கள் அதன் கால்பகுதிகளில்
பொருத்தப்பட்டு இருந்தன ஆகையால் விமானிகளால் உள்ளிருந்தபடி எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

டெஸ்லாவின் இந்த அதிநவீன
வடிவமைப்பிற்கு வேற்று
கிரகவாசிகளின் உதவி கிடைக்கப் பெற்றது என்ற சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில், நிக்கோலா டெஸ்லா நிகழ்த்திய மிக மர்மமான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சோதனை  பற்றி பார்ப்போம்.

1899-ஆம் ஆண்டின் ஒரு நாள்
இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது "நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது"1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரகவாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று" என்று டெஸ்லா கூறியுள்ளார்.

இந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை
விஞ்ஞானிகள் வகுத்தன.


அதாவது குறிப்பிட்ட நாளில்
ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட
புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு.

ஆனால், பின்னர் மற்றொரு
கோட்பாடு எழுந்தது. டெஸ்லா
ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திரியும் ஒரு விண்கப்பலில் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு. இந்த விண்கப்பல்  என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண்டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படுகிறது. அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார். என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.