21/10/2018

திராவிடம் : திராவிடர் என்றால் தென்னிந்தியர் என்று பொருள்...


தமிழ் தேசியம் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...

திராவிடத்தின் தேவை (இருந்ததில்லை... ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...

திராவிடம் : இல்லை... பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும் (பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...

தமிழ் தேசியம் : அதை தமிழர் என்ற பெயரில் செய்ய வேண்டியது தானே... ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?

தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?

திராவிடம் :... ?

தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

தற்காலத்தில், தமிழர் தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இழிவாக பலராலும் கருதப்படுவதால், இந்த நிலை நீட்டித்தால் தமிழரல்லாத தெலுங்கு கன்னட மலையாள இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

ஆகையால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர் இன வரையறையை குழப்ப துவங்கியுள்ளனர் இந்த திராவிடர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.