05/09/2017

2015 சட்டமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்த போது...


அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து  மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள்  மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்து விட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை.

அதற்காக  இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட..

இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக் கொள்ள, டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார்.

தோழர் பிரின்சு ,எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம்.

கேப்பையில நெய் வடியுதாம்...

 பதிவு - Bala Bharathi . Ex MLA

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.