05/09/2017

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்களை – ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மிரட்டிய போலீஸ்...



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், இன்று (04-09-2017)  காலை மாணவர்கள் போராட்டத்தைத் துவங்கினர்.  நேரம் செல்லச் செல்ல மாணவர்கள் கூட்டம் அதிகரித்தது.

இதைக் கண்டு மிரண்ட போலீசு – மாணவர்களைக் கலைந்து போகுமாறு கூறியது. பின்னர் புல்டோசரைக் கொண்டு வந்து அங்கு மாணவர்களுக்கு அருகில் ஓட்டிக்கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து செல்லாமல், அதனை எதிர்த்து எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புல்டோசரை பின் வாங்கிக் கொண்டு சென்றது. புல்டோசரைக் கொண்டு மிரட்டினால் மாணவர்கள் பயந்து கலைந்து சென்று விடுவார்கள் என்று கனவு கண்ட போலீசுக்கு மாணவர்கள் கொடுத்த செருப்படி இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.