23/09/2017

வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 2...


உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?

இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்
அவர்கள்உண்மையில்

மருத்துவச்சிகள்...

மருத்துவம் பார்க்கும் பெண்களை எப்படி சூனியக்காரிகள் என்று ஆனது என்பதற்கு காரணம் அவர்களின் நடவடிக்கையும் தேவாலயங்களின் சபையினரை எதிர்த்தாலும் தான்.

எப்படி என்று பார்ப்போம்..

மருத்துவச்சிகள் கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்க கையில் எலும்பு துண்டுகளை வைத்து இருப்பார்களாம் [டெதஸ் கோப்போன்று]..

வயிற்றில் உள்ள குழந்தையை கவனிக்க கையில் வாத்துடைய எலும்பை வைத்து குழந்தையின் சப்தத்தை கேட்பார்களாம்...

அடுத்தது குழந்தை பெறக்கூடிய நேரத்தில் அந்த தாயை சமாதானம் செய்ய வாய்களை முணுமுணுத்து கொண்டே இருப்பார்களாம்.. அந்த முணுமுணுப்பு பிற்காலத்தில் மந்திரம் என்று சித்தரிக்கப்பட்டது.

அதன் பிறகு பேறுகால வலியின் உச்சக்கட்டத்தில் கதறிக்கொண்டு இருக்கும் அந்த தாயின் கவனத்தை திசை திருப்ப தலை விரி கோலம் கொண்டு ஆட்டம் ஆடுவார்களாம்.. அந்த ஆட்டத்தை கண்ட அப்பெண் பயத்தில் கூட குழந்தையை ஈன்று விடுவாள் என்ற வரலாறும் உண்டு.

அடுத்து ரண மருத்துவம் தெரிந்த அவர்களுக்கு இரத்தத்தை கண்டு பயம் இருக்காது அல்லவா [மருத்துவர் இரத்தத்தை பார்த்து பயந்தால் நோயாளியின் நிலை என்ன?]..

அப்படியாக பிறந்த  குழந்தையை இரத்தத்தோடு தூக்கி மக்கள் மத்தியில் காண்பிப்பார்களாம்..

ஆனால் அன்றைய காலகட்டத்தில் இரத்தம் ஒரு தீமையின் அடையாளமாக கருத்தப்பட்டது, அதன் காரணமாகத்தான் மாதாந்திர தீட்டுள்ள பெண்களை கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இப்படி தான் எலும்பு துண்டு, இரத்தவாடை, தலை விரி கோலம்
கருப்பு ஆடை..

அனாச்சார விஷயங்களில் கலந்து கொள்ளாமல் ஊருக்கு ஒதுக்குபுறமாக மருத்துவம் மூலிகை என்று வாழ்வதால் தனிமை தேவை.

இப்படி இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இவை..

இதில் கிருஸ்துவ சபை எங்கே எதிர்க்கப்பட்டது என்றால்..

அக்காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை.. வயிற்றில் கரு கலைந்து விட்டால் அவள் குற்றம் செய்தவள் ஆகவே கடவுள் அவளை தண்டிக்கிறார் என்று ஒரு தவறான நம்பிக்கை இருந்தது..

இதை எதிர்த்து போராடியது இந்த மருத்துவச்சிகள் தான் கரு கலைவதற்கு காரணம் உண்டு. இதற்கும், தண்டனைக்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டனர்..

இதான் பிரச்சனை..

சபையை எதிர்த்து பேசுவது கடவுளை எதிர்ப்பதற்கு சமம் என்ற ரீதியில் இவர்கள் அனைவரும் சூனியக்காரிகள் என்று பரப்பப்பட்டு இந்த கொடூரம் அரங்கேறியது..

எந்த அளவுக்கென்றால் Malleus Maleficarum என்ற புத்தகத்தை ஜெர்மனி கேத்தலிக் பிரிவை சார்ந்த ஹென்ரிச் கேறாமற் என்பவர் எழுதியுள்ளார்..

இந்த புத்தகத்தில் சூனியக்காரிகளை [மருத்துவச்சிகளை] எப்படியெல்லாம் கொல்வது என்பது தான் இப்புத்தகத்தில் உள்ளவைகள்...

ஆரம்பத்தில் பார்த்த அந்த கிங் ஜேம்ஸ் வேறுயாருமில்லை பைபிளை தொகுத்தவர்..

ஆம் கிங் ஜேம்ஸ் வர்சனை தொகுத்த இந்த மன்னர் தான் சூனியக்காரிகளை கொல்ல வேண்டும் என்று முதன் முதலில்
கட்டளை இட்டவர்...

பின்னாளில் இதை உணர்ந்தவர் தனது பாவத்தை கழுவ எண்ணியே பைபிளை தொகுத்தார் என்ற கூற்றும் உண்டு, ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.