12/08/2018

சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம்...


விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளார்.

விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் பதிவாளர் இருந்த கணேசனுக்கு தொடர்பு என ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

பதிவாளர் கணேசன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பல்கலைகழகத்தின் பதிவாளர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி  துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை துணைவேந்தர் நியமித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.