12/08/2018

யாரெல்லாம் திராவிடர்? கன்னட ஈ.வே.ரா விளக்கம்...


யாரெல்லாம் திராவிடர்?

எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.

சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?

ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.

சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்.

இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

-- ஈ.வே.ரா  (குடிஅரசு, 03.06.1944)

அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்க வேண்டும்.

ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.

அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார் வந்தாலும் தமது நாட்டை  பங்குபோட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் மற்றவர் என்று வரும் போது அவரவர் விருப்பம். 

ஆக திராவிடம் என்பது தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி. கொள்ளையடித்து அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது என்று புரிகிறதா முட்டாள் தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.