24/06/2018

சேலம் 8 வழி சாலை எனும் மரண வழி சாலை...


ஏக பட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து சாபங்களை பெற்று உருவாகி வரும் சென்னை to சேலம் 8 வழி சாலையில் என்ன வெல்லாம் நடக்க இருக்கி்றது என்று பார்க்கலாம்.

முதலில் அரசாங்கம்  கொடுத்துள்ள அறிக்கை படி கைபற்ற படும் நிலத்தின் அளவு 1900 ஹெக்டர் .ஆனால் நெடுஞ்சாலை துறை ஆவணத்தில் அது தெளிவாக 2560 ஹெக்ட்ர் கைப்பற்ற போவது குறிப்பிட பட்டு இருக்கிறது ..

இதில் 120 ஹெக்டர் காடுகள் அழிக்க பட இருக்கிறது.

8 மலைகள் அழிக்க பட இருக்கிறது.

9 மேம்பாலங்கள் கட்ட பட இருக்கிறது.

வாகனங்கள் செல்ல 22 கீழ்வழி சாலை அமைக்க பட இருக்கிறது.

3 சுரங்க பாதை வர இருக்கிறது.

8 சுங்க சாவடி வர இருக்கிறது.

10 லாரி மற்றும் பேருந்து நிறுத்துங்கள் வர இருக்கிறது.

மேலும் 4 லட்சம் மரங்கள் வெட்ட பட இருக்கின்ற. ( இவைகள் கணக்கில் வெறும் 6400 மரங்கள் வெட்ட போவதாக மட்டுமே சொல்ல பட்டு இருக்கின்றன ).

23 பெரிய பாலங்கள்.. 156 சிறிய பாலங்கள் வர போகிறது.

இவை எல்லாம் விட நிலம் இழந்து வீடு இழந்து கையறு நிலைக்கு 1000 கணக்கான விவசாயிகள் தள்ள பட இருக்கிறார்கள்.

ஒரே ஒரு சந்தேகம் தான்... இன்று மண்ணை வாரி தூற்றி வயிறு எரிந்து சாபம் கொடுத்து கொண்டிருக்கிறான் அப்பாவி விவசாயி.

இதற்க்கு குரல் கொடுப்பவர்கள் யாவரையும் சமூக விரோதி .. நட்சலைட்.. தீவிர வாதி என முத்திரை குத்தி கைது செய்கிறது அரசாங்கம்.

கேள்வி என்னன்னா...

நல்ல மனநிலையில்  இருபவனை அழைத்து சென்று பைத்திய விடுதியில் சேர்த்து ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து நிஜ பைத்தியமாக மாற்றுவதை போல....

இன்று அமைதியாக இருக்கும் மக்களை இப்படி வலுகட்டயமாக தீவிர வாதியாக மாற்றுகிறதே அரசாங்கம்...

நாளை அவன் நீ கட்ட போகும் பாலத்திற்கு நிஜமாக வெடி குண்டு செய்து வந்து வைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.?

- சமூக விரோதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.