24/06/2018

வானில் மிதக்கும் நகரம்...


வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டை விட ஆச்சரியமான விசயம் தான் வானத்தில் மிதக்கும் நகரம்.

ஒரு வேளை இந்த வேற்றுகிரகவாசிகள் இனம் அறிவில், அறிவியலில் உச்ச நிலை அடைந்து தங்களது மொத்த நகரத்தையே நகர்ந்தும் வல்லமை பெற்று இருக்கலாம். வானத்தில் மிதக்கும் நகரம் தோன்றும் ஒவ்வொரு முறையும் அதன் மீதான அதிகப்படியான ஆர்வமும்,பயமும் நம்மிடம் அதிகரித்தே உள்ளது. சரி இந்த மிதக்கும் நகரம் சம்பவங்களுக்கு விஞ்ஞானிகள்,
சிதிகோட்பாட்டாளர்கள் தரும் விளக்கங்கள் என்ன? என்றும்.
இதற்கான நமது அறிவியல் விளக்கம் 
என்ன? என்றும் பார்ப்பதற்கு முன்பு மிதக்கும் நகரம்  பற்றிய பண்டைய,நடப்பு சம்பவங்களை பார்த்துவிடலாம்.

பைபிளில் திகிலடையச் செய்யும் வெட்டுக்கிளி வாதையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வானில் மிதக்கும் நகரம். முதலாவதாக, இந்த வாதையை நன்றாக புரிந்துகொள்ள நமக்கு உதவும் மற்ற வேதவசனங்கள்
2 பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டினூடே எழுதப்பட்ட பைபிள் புத்தகமாகிய யோவல், யோவான் பார்க்கும் அதே போன்ற, வெட்டுக்கிளிகளை உள்ளடக்கும், ஒரு பூச்சிகளின் வாதையை விளக்குகிறது. ( யோவேல் 2:1-11, 25)

அது விசுவாசத்துரோக இஸ்ரவேலுக்கு அதிக நலக்கேடை உண்டாக்குவதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட யூதர்கள் மனந்திரும்பி யெகோவாவின் தயவுக்கு திரும்புவதிலும் விளைவடையும். (யோவேல் 2:6, 12-14 )

அந்தக் காலம் வந்தபோது, யெகோவா அவருடைய ஆவியை “மாம்சமான யாவர் மேலும்” ஊற்றுவார், “யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” அச்சம் தரும் அடையாளங்களும் திகிலூட்டும் அறிகுறிகளும் இருக்கும்.— யோவேல் 2:11,28-32 ,

அன்றைய இஸ்ரவேல் மக்கள் தங்கள் வானில் கண்ட காட்சியின் விளைவாக தான் இந்த வசனங்களை நான் பார்க்கிறேன். வானில் மிதந்து வந்த வேற்றுகிரகவாசிகள் இனம் பூமிவாசிகளை அழிக்க வெட்டுகிளி போன்ற உயிரினத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஹிஸ்டரி சேனலில் வெளிவந்த (Ancient Aliens, S06E18 “Aliens and Insects) என்ற தொடரை பார்த்தால் இந்த வசனங்கள் பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு புரியும்.

#பண்டைய_ரோம சாம்ராஜ்ஜியத்தின்
வரலாறுகளைத் தொகுத்த பிரபல வரலாற்று ஆசிரியராகக் கருதப்படும்,
“டைட்டஸ் லிவியஸ்” (Titus Livius) என்பவர், பிரபலமான வரலாற்றுத் தொகுப்பு நூலாகக் கருதப்படும்
“Ab Urbe Condita Libri”  (நகரத்தின் அத்திவாரத்திலிருந்து
தொகுக்கப்பட்ட நூல்கள்), எனும் தனது நூலில், வானில்_கப்பல்கள் என்ற
தலைப்பில் ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, அன்றைய ரோம
சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான ரோம் நகரில், கி.மு. 214 ஆம் ஆண்டின் குளிர்காலப் பகுதியில், கப்பல்களைப் போன்ற சில விசித்திரமான ஊர்திகள் மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் வானில் தோன்றியதாகவும், தொடர்ச்சியாக இவை வானில் மிளிர்ந்து கொண்டிருந்ததாகவும் இவரது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது நூலில் இந்தச் சம்பவத்தை டைட்டஸ், “navium speciem de caelo adfulsisse” (வானிலிருந்து நெருங்கி வந்து மின்னிக் கொண்டிருந்த நகரங்களின் தோற்றம்) என்று நேரடியாகவே தனதுமொழியில் பதிவு செய்திருக்கிறார். வானில் மிதந்த நகரமா போன்ற காட்சிகளை மக்கள் வானில் கண்கூடாகக் கண்டதாகப்
இந்த நூலின் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.


நைஜீரியாவில்...

2011-ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய எல்லை நகரமான டராஸோவில் நூற்றுக்கணக்கான மக்கள் வானத்தில் மிதந்த ஒரு பெரிய நகரத்தை கண்டுள்ளனர்.

அந்த நகரத்தின் தரைப்பகுதிக்கு மிக அருகில் ஒரு மெல்லிய மேகம் சூழ்ந்துள்ளது, அதனுள் மிதக்கும் நகரம் வெளியாகியுள்ளது.

வானத்தில் வெளியான மிதக்கும் நகரத்தை நேரில் கண்ட சாட்சிகள் அதில் அழகான பெரிய கட்டிடங்கள், பெரிய கோபுரங்களை பார்த்தது மட்டுமின்றி, நகரத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயந்திரங்களின் ஒலிகளையும் கேட்டுள்ளார்.

சீனாவின் போஷன்...

நைஜீரியாவை தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சீனாவின் போஷன் நகரில் இரண்டாம் முறையாக மிதக்கும் நகரம் தோன்றியது..

ஊடக தரவுகளின்படி, சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சிகளாக இருக்கின்றன மற்றும் அதை பேய் நகரம் என்றும் நம்புகின்றனர். சீனாவில் வெளியான அந்த மிதக்கும் நகரத்தில் வானளாவிய கட்டிடங்கள் இருப்பதை சமூக வலைத்தளங்கள் துல்லியமாக காட்சிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011-ஆம் ஆண்டு, சீனாவில் தெற்கு அன்ஹுயில் உள்ள ஹுனான்ஷான் நகரில் மிகத்தெளிவாக ஒரு மாபெரும் நகர அமைப்பு கொண்ட மிதக்கும் நகரம் தோன்றியது.

கலிபோர்னியா...

இப்போது சமீபத்தில் சீனாவில் இரண்டாம் முறை தோன்றிய நகரத்தை போன்றே ஒரு மிதக்கும் நகரம் கலிபோர்னியாவில் வெளியாகியுள்ளது, இதற்கும் பல நகரவாசிகள் சாட்சிகளாய் உள்ளனர்.

மிதக்கும் மர்மமான நகரத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை மூன்று கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஒரு இந்த மிதக்கும் நகரங்கள் முழுக்க முழுக்க ஒரு விரிவான புரளியாக இருக்க வேண்டும் அல்லது இதுவொரு மிகவும் ரகசியமான அரசாங்க சதியாலோசனை திட்டமாக இருக்க வேண்டும் அல்லது நிஜமாகவே மிதக்கும் நகரங்கள் வேறொரு உலகத்தின் நுழைவாக இருக்க வேண்டும்.

இந்த ப்ளோட்டிங் சிட்டி சர்ச்சையில் மிக மர்மமானபகுதி என்னவென்றால் கலிபோர்னியாவில் தோன்றிய மிதக்கும் நகரமும் சீனாவில் தோன்றிய நகரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளது தான்.

அணு பிளவு பரிசோதனை...

சுவிச்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் சிஇஆர்என் (CERN) மையத்தில் நடத்தப்பட்ட பெரிய ஆட்ரான் மோதுவி அணு பிளவு பரிசோதனைகள்
(Large Hadron Collider atom smasher)
மூலம் ஏற்படுவதே இந்த மிதக்கும் நகரம் என்று சிலர் நம்புகின்றனர்.

இதுவரையிலாக கருந்துளைகளை கண்டுபிடிக்கவும், சிறிய அளவிலான கருந்துளைகளை உருவாக்கவும் தான் விஞ்ஞானிகள் உயர் ஆற்றல் வெளிக்கிடும் அணு பிளவை நிகழ்த்துயுள்ளனர்.

இதுபோன்ற முயற்சிகளின் போது சிறிய அளவிலான கருப்பு ஓட்டைகளை உருவாக்கும் சாத்தியகூறுகளுடன் நமது சொந்த பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பின் மூலம் ஒரு இணை பிரபஞ்சத்தை கசிய வைக்கவும் முடியும் என்று சில விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.

இது போன்ற அறிக்கைகளால் சிஇஆர்என் சோதனைகள் மூலம் பூமி கிரகம் முன்பு காணாத பல நிகழ்வுகளை உருவாகலாம் என்று பல மக்கள் நம்புகின்றனர், குறிப்பாக இதுபோன்ற மிதக்கும் நகரங்கள்.

இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்றும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள் கூறுகிறாரக்ள்.
அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான்
- ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.


இந்த மிதக்கும் நகரங்களை பாடா மார்கனா (Fata Morgana) என்றும் சிலர் நம்புகின்றனர், அதாவது துருவ பகுதிகளின் நிலம் மற்றும் கடல்களில் தென்படும் கானல் நீர். இதுவொரு இயற்கையான ஒளியியல் மாயை ஆகும். பாடா மார்கனா ஆனது வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள காற்று அடுக்குகளுக்குள் நுழைந்து கடந்து செல்லும் ஒளி கதிர்களால் ஏற்படுகிறன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி வேற்றுகிரகவாசிகள் வரும் பரிமாணம் பற்றி மீண்டும் ஆராய்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.