24/06/2018

துபாய் ஷார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டிலிருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக சும்மா மூன்று பட்டனை அமர்த்தி போன் செய்வது போல் காதில் வைத்துள்ளார்...


ஆனால் குழந்தை சுமையா அமர்த்திய நம்பர் துபாய் கண்ட்ரோல் போலீசிற்க்கு சென்றுவிட அவர்கள் போன் அட்டன் செய்து யார் என கேட்டால் ஒரு குழந்தையின் குரல் உடனே நிலமையை புரிந்து அன்போடு உன் பெயர் என்ன என கேட்டதும் சுமையா என்று சொல்ல உனக்கு என்ன வேணும் என்றதும் எனக்கு இப்பவே பெருநாள் கிஃப்ட் வேணும் என சொல்லியிருக்கிறாள் சுமையா அவர்கள் சிரித்துக்கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து பெருநாள் கிஃப்டோடு சென்றுவிட்டனர்.

பெருநாள் அதுவுமா வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேணாம் நாங்க சுமையாவுக்கு கிஃப்ட் கொடுக்கவே வந்தோம் என கூறி கைநிறைய அன்பளிப்புகளை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

காவல்துறை  உண்மையாக மக்களின் நண்பனாக இருந்தால் யார்தான் வெறுக்கப் போகிறார்கள்?

மக்களை நேசிக்கும் எல்லா காவலர்களுக்கும் மக்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.