24/06/2018

வேற்று கிரகவாசிகள் வருவது வேற்று கிரகங்களா வேறு பரிமாணத்திலா?


வேற்றுக்கிரகவாசிகள் வேற்று கிரகங்களில் இருந்து வருகிறார்களா? இல்லை நமது பூமியில் உள்ள நமது கண்களுக்கு புலப்படாத மற்றொரு பரிணாமத்தில் இருந்து வருகிறார்களா?

ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழ்வார்களேயானால், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவில் மேம்பட்ட உயிரினமான இருப்பார்கள்.

நாமே இந்த அளவு செயல்படும் போது வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருந்தால் அவர்களின் செயல்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் செய்யும் மேற்படி தேடுதல் வேலைகளை அவர்கள் என்றோ செய்திருப்பார்கள் (பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே). ஒருவேளை அப்படி அவர்கள் தேடி கண்டுபிடித்த கிரகம்தான் பூமியாகவும் இருக்கலாம். பரிமாணம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அதைப் பற்றிய சிறு விளக்கம் பின்வருமாறு.

பரிமாணம் என்பது ஒரு அளவீடு அது நீளம், அகலம், உயரம், வெப்பநிலை, வெளிச்சம் , அலைநீளம் என பலவற்றை பொதுவாக குறிக்க பயன்படும் அளவீடு.
சரி நமக்கு தெரிந்த,தொழிற்படும் பரிமாணங்களை பார்ப்போம்.

புள்ளி.. Dot பரிமாணம்..

ஒரு புள்ளி ஒரு இடத்தில் நிலையாக இருக்குமெனில் அதாவது அதனால் எங்கும் நகர முடியவில்லை எனில் அது ஒற்றை பரிமாணத்தில் இருக்கிறது.இதை கணித முறையில் கூறினால் dot.

முதல் பரிமாணம்..

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மட்டுமே நகர முடியும் எனில் அது ஒற்றை பரிமாணத்தில் இருக்கிறது.கணித முறையில் straight line. அதாவது Dot. பரிமாணத்தின் தொடர்ச்சியான வடிவமே முதல் பரிமாணம்..ஒரு நேர்கோடு.

இரண்டாம் பரிமாணம்...

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மற்றும் இடம் வலம் மட்டுமே நகர முடியும் எனில் அது இரண்டாம் பரிமாணத்தில் இருக்கிறது.ஆகையால் இரண்டாம் பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால் நீளம் மற்றும் அகலத்தை மட்டுமே கணக்கிட முடியும். இந்த உரியினம் முப்பரிமான உலகில் இருந்தாலும் அதன் பார்வை புலன் படி அவை அனைத்தையும் இருபரிமாண காட்சிகளாகவே பார்க்கும். அதாவது முப்பரிமான பொருட்களை இவைகளால் காண முடியாது.. ஆனால் மூன்றாம் பரிமாணத்தில் உள்ள உயிரினம் பற்றி உணர முடியும்.முதல் பரிமாண இரண்டு பொருள்களை ஒன்றையொன்று செங்குத்தாக இணைத்தால் கிடக்கபெருவது இருபரிமாண வடிவம்.x மற்றும் y அச்சு.

மூன்றாம் பரிமாணம்...

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மேலும் இடம் வலம் மற்றும் மேல் கீழ் நகர முடியும் அது மூன்றாம் பரிமாணத்தில் இருக்கிறது. ஆகையால் முன்றாம் பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால் நீளம்,அகலம் மற்றும் உயரத்தை கணக்கிட முடியும். தொலைவு, ஆழம் ஆகியவற்றை இப்பரிமானத்தில் வாழும் உயிரினங்களால் எளிதில் கணக்கிட முடியும். எ.கா மனிதன் மற்றும் விலங்குகள்.

நான்காம் பரிமாணம்..

காலவெளி spacetime.. கணித முறையில் நான்காம் பரிமாணத்திற்கும் வடிவமைப்பு உள்ளது.இரண்டு பரிமாணங்கள் உடைய இரண்டு பொருளை ஒருங்கிணைத்தால் கிடைப்பது முப்பரிமான பொருள்…அதே போல் மூப்பரிமாணம் கொண்ட இரண்டு பொருள்களை இணைத்தால் கிடைப்பது என்ன?பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இவைகள்மட்டுமே மனிதன் நன்கு அறிந்த பரிணாமத்தின் வகைகள் ஆனால் இந்த ஸ்ட்ரிங் தியரி பரிமாணங்களை இன்னும் விரிவாக்கி கொண்டே செல்கிறது…

நான்காவது பரிமாணத்தில் கடந்தக் காலத்தைப் பற்றிய கவலையோ, வருங்காலத்தைப் பற்றிய பயமோ இருக்காது. மிகவும் தெளிவான மனநிலை ஏற்படும். காலத்தை நமக்கு ஏற்றார்போல வளைக்கமுடியும் என்ற உண்மை தெரியவரும். மூன்றாவது பரிமாணத்தில் ஆச்சர்யமாக தோன்றிய பல விசயங்கள் இங்கு சாதாரணமாகத் தோன்றும்.


இந்த பிரபஞ்சம் முப்பரிமாண அமைப்பை கொண்டுள்ளதாக நாம் நினைக்கிறோம் காரணம் நம்முடைய பார்வை புலன் முப்பரிமாண அமைப்புக்கள் வரை மட்டுமே காணக் கூடியது,உண்மையில் நம் பிரபஞ்சம் பல பரிமாண அடுக்குகளை கொண்டது, நமது பார்வை புலன் மற்றும் நம்முடைய அடிப்படை துகள்களின் காரணமாக நம்மால் மற்ற பரிமாணங்களை காணமுடிவதில்லை… பல பரிமாணங்கள் என்ற கோட்ப்பாடு பற்றி பல விஞ்ஞானிகள் நம்பினாலும் அவற்றை நிருபிக்க சான்றுகள் இல்லை…

காரணம்...

1.பரிமாணங்கள் அனைத்தும் பல சிறு சிறு அடுக்குகாளாக இணைந்துள்ளன. அந்த அடுக்குகள் மிகச்சிறிய தூரங்களில் இருக்கின்றன அதாவது சில மில்லிமீட்டர் தொலைவில் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பரிமாணத்தில் நம்முடைய முப்பரிமாணம் சிறு இடத்தையே வகித்திருக்கலாம். அதனால் தான் அதை நம்மால் உணரமுடிவதில்லை.

2.மற்ற பரிமாணத்தில் காணப்படும் அடிப்படை மூலக்கூறுகள் வேறாக இருக்கலாம்.ஆகவே அந்த துகள்களால் ஆனா உலகை நம்மால் அறிய முடியாமலும் போயிருக்கலாம்
மற்ற பரிமாணங்களை எப்படி அணுகுவது?இதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை.ஆனாலும் விஞ்ஞானிகள் கரும் சக்தி இதற்கு உதவும் என நம்புகின்றனர். ஆகையால் தற்போது விஞ்ஞானிகளின் பார்வை கரும் சக்தியை நோக்கியுள்ளது.
ஆனால் சில விஞ்ஞானிகள் இதை ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் பரிமாணத்தை அணுகுகின்றனர்.

அதாவது நாம் மற்ற பரிமாணங்களை முன்பே அணுகிவிட்டோம் என்கிறார்கள். ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) CERN இல் உள்ள துகள் செலுத்தியில் பல அடிப்படை மூலக்கூறுகளை மோத செய்து உப துகள்களை கண்டறிகின்றனர்…அப்போது அந்த அடிப்படைதுகள்கள் எட்ட முடிந்த வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 99% அடைந்த பின் அது நம்முடைய பார்வையிலிருந்து மறைந்து (கரைந்து)போவது போல் தோன்றினாலும்,அது அடுத்த பரிமாணத்தில் நுழைவதாக சில விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர்..

வேற்றுக்கிரகவாசிகள் நமது முப்பரிமாண உலகில் பிரவேசிக்கவே
மனித உடல் போன்ற உடைகளை உடுத்தியிருக்கலாம். உதாரணமாக நாம் கடலின் அடியில் செல்வதற்கு பயன்படுத்தும் ஆக்ஸிஜன் உடை போன்று. பறக்கும்தட்டுகளும் கூட இந்த அடிப்படையில் பயன்படுத்தபடுவதாக தோன்றுகிறது.

ஒரு பேச்சுக்கு வேற்றுக்கிரகவாசிகள் நான்காவது, ஐந்தாவது, அல்லது அதற்கு அடுத்த பரிமாணங்களில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்களில் அறிவுத்திறமையும் தொழில் நுட்பத்தையும் நினைத்துப் பாருங்களேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.