24/06/2018

வேற்றுகிரகவாசி....


வேற்றுகிரகவாசி என்றவுடன்; சிலர் அவர்களை வரவேற்பேன் என்பார்கள், பலர் அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்வேன் என்பார்கள். வெகு சிலர் அட போங்கடா முட்டாபயளுகலா உங்களுக்கு வேறவேலையே இல்லையா? என்று கூறிவிட்டு வேலைகளை பார்க்க துவங்குவார்கள்..

நாங்கள்..  வெற்று வெறுப்பில் உள்ளவர்களுக்கும் சேர்த்தே இதை சொல்லி வைப்போம்..

வேற்றுகிரகவாசிகளை  வேற எங்கேயும் தேட வேண்டாம்  நம்ம தொகுதியில் தான் இருக்கிறார்கள்.

வேற்று கிரகவாசிகளின் கோள்களின் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டதாவது நமது சூரிய குடும்பத்தை
தாண்டி 1700 கிரகங்களில் உயிர் வாழ கூடிய சூழ்நிலை உள்ளது.

சரி உயிர் வாழ சாத்தியமுண்டு என்று விஞ்ஞானிகள் எப்படி
அனுமானிக்கின்றனர்?

கண்டு பிடிக்கபட்ட கோளின் நிறம், கனிமங்கள், நிறை,சூரியனிலிருந்து அவை இருக்கும் தூரம், கோளின் சுழற்சி வேகம், ஆகியவற்றை கொண்டு அளக்கப்படுகிறது.

ஆனால் அவற்றை தாண்டி தட்பவெப்பம் உயிர் வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது..

மேற்கூறிய அனைத்தும் இருந்தாலும் தட்பவெப்பமே உயிர்
உருவாவதற்கான சூழலை அமைக்கிறது…

இந்த தட்பவெப்ப நிலையை வியாழன் கிரக துணைக்கோளான ஐஒ உடன்
ஒப்பிடுகின்றனர். ஐஒ மிகக் கடும் குளிர் நிறைந்த பனிகோள். ஆனால் அங்கு உயிரிகள் வாழும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காரணம் மாபெரும் நிறை கொண்ட வியாழன் கிரகத்தின் ஈர்ப்பினால் உண்டான இழுவிசை காரணத்தினால்
ஐஓவின் பனிக்கடியில் வெப்பம்
உருவாகிறது.அந்த வெப்பத்தின் காரணமாக உயிரினங்கள் உருவாக்கி
இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சரி வெப்பம் இருந்தால் தான் உயிரினம் தலைக்குமா? இல்லை.. இதற்கு நமது பூமியே அதற்கு ஆதாரம். பூமியில் மிக கடும் பனி மற்றும் குளிர் நிலவும் எவரெஸ்ட் போன்ற பனி பகுதிகளில் கூட உயிரினங்கள் வாழ்கின்றன என பல ஆராய்ச்சியின் மூலம்
விஞ்ஞானிகள் நிருப்பித்துள்ளனர்.

நாம் இதுவரைபூமி, நிலா, செவ்வாய், மேலும் நமது சூரிய குடும்பம் முழுவதையும் ஓரளவு ஆராய்ந்துள்ளோம்.

மேலும் சிலபல ஆராய்ச்சிகள் நம்முடைய சூரிய குடும்பம் வரை நீண்டாலும் அதை தாண்டி அல்பா செண்டரி, கெப்ளர் என அருகில்
இருக்கும் சூரிய குடும்பங்களும் ஆண்ட்ரோமிடா என்ற காலக்ஸிகளும் என்று பல உள்ளன.

இவை அனைத்திலும் அதனதன் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் உருவாக்கி இருக்கலாம்.. இல்லை உருவாகி காலநிலை, தட்பவெப்பம்
காரணமாக அழிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து
தெரிவிக்கின்றனர்.

நாம் அனுப்பிய வாயேஜர் 1,2
விண்வெளியை சுற்றி வருகிறது…

அது நம் அடையாளத்தை வேறு ஏதேனும்
வேற்றுக்கிரகவாசிகளுக்கு எடுத்துக் காட்டும் என நம்புகிறேன்..

தற்போது நாம் உருவாகும் செயற்கை அலைகள் அதிக வலிமையுடையதாக உள்ளது.

சில குறைவான அலை வரிசையில் உள்ளது.. இந்த சிக்னல்கள் நமது பூமியில் மட்டும் சுற்றி வட்டமிடவில்லை.. அதையும் தாண்டி விண்வெளியை அடைந்து விண்வெளியில் பயணிக்கிறது….

ஒன்னு சொல்லடுமா நாம் பேசுகின்ற மொழி ஒலியின் மூலக்கூறுகள் (Molecule) அனைத்தும் அழிவின்றி இந்த பிரபஞ்சத்தில் கலந்துள்ளது, நம் மூதாதையர்களின் பேச்சுகளும் இதில் அடங்கும்.

இவை நாம் பூமியில் இருக்கிறோம் என்றதொரு மற்றொரு அடையாளம்…..

இந்த அலைகள் மற்ற வேற்று கிரகவாசிகளுக்கு நாம் இருக்கும் இடத்தை எதிர்காலத்தில் காட்டி
கொடுக்கலாம்… அன்று வேற்று கிரகவாசிகள் வெற்றி காண்பார்கள் நாங்கள் வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்து விட்டோம் என...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.