24/06/2018

வேற்று கிரகவாசிகளை பற்றி பசிபிக்கடல்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்...


அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார்..

இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம். அல்லது  இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்லை....

Otto Oscar Schneider’ இவர் உலக யுத்தத்தின் போது நாசி,நேசபடைகள் எற இரு தரப்புக்கள் சார்பாகவும் யுத்தம் செய்த ஒருவர். ஆரம்பத்தில் அவர் ஜஃேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் படையில் ஒரு U-boat ரக நீர்மூழ்கிக் கப்பகுக்கு கேப்டனாக இருந்தார். யுத்தத்தின் போது நேச நாடுகளால் சிறைப்பிடிக்கப் பட்டார். அதன் பிறகு ஐக்கிய அமெரிக்காவின் குடிமகனாக அவர் மாற்றப்பட்டு, இந்த தேசத்தின் மீது உண்மையான பக்தி வைக்கும் அளவுக்கு அவர் கொள்கை மாற்றம் செய்யப்பட்டார்.

அவர் கண்டுபிடித்த அதிவேக கமெராவின் மூலம் 1946, ஜூலை 12ம் திகதி பசிபிக் பெருங்கடல் பகுதியை ஒட்டிய  #பிக்கினி_தீவில் (Bikini Island) நடத்தப்பட்ட அனுகுண்டு வெடிப்புப் பரிசோதனை கூட படம் பிடிக்கப் பட்டது. அந்தப் புகைப்படங்களின் அசல் பிரதிகள் இப்போது கூட அமெரிக்க அரசு வசம் இருக்கின்றன.

மேலும், அன்று பிக்கினி தீவில் நடத்தப் பட்ட அணுகுண்டுப் பரிசோதனையின் போது, அங்கிருந்த பல பறக்கும் தட்டுக்கள், பரிசோதனையின் காரணமாக அங்கிருந்து இடத்தைக் காலி செய்து, அதிவேகத்தில் பறந்து சென்றன. அவ்வாறு பறந்து செல்லும் சில பறக்கும் தட்டுக்கள் கூட இந்தப் புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன.


அன்றைய காலங்களில் பிக்கினி தீவு என்பது, கொசு மொய்ப்பது போல் பறக்கும் தட்டுக்களால் மொய்க்கப்பட்டிருந்த ஒரு தீவுப் பிரதேசமாகும். குறிப்பாக அந்தத் தீவைச் சூழவுல்ல கடலுக்கு அடியில் ஏராளமான பறக்கும் தட்டுக்களின் நடமாட்டங்கள் உண்டு. அந்தத் தீவில் வாழும் பழங்குடி மக்கள் இந்தப் பறக்கும் தட்டுக்குரியோரால் நீண்ட நாட்களாகப் பல இன்னல்களுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாகிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த வேற்றுக் கிரகவாசிகளின் விசித்திரமான சில பரிசோதனைகளின் விளைவாக, தமது வாழ்வாதாரங்களாக அவர்கள் வளர்த்து வரும் பல கால்நடைகள், மற்றும் பண்ணை விலங்குகள் அங்கவீனப் படுத்தப்படுவடுண்டு. இவற்றால் அவர்கள் பெரும் நஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். 

இதன் விளைவாக அமெரிக்க அதிகாரிக “ஜெனரல் மெக் ஆதர்” (General MacArthur), ‘அடுத்த யுத்தம் அனேகமாக இந்த வேற்றுக்கிரவாசிகளோடு தான்’ என்று அடிக்கடி மீடியாக்களில் கூறிவந்தார்.”

உலகின் 90 சதவிகிதம் நில நடுக்கங்களும் 80 சதவிகிதம் பெரிய நில நடுக்கங்களும்  பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன.
40,000 கிலோமீட்டர் நீளமான குதிரை லாட வடிவமுடைய இந்த நெருப்பு வளையம் நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரைகள் வழியாக சிலியில் முடிவடைகிறது.
வேற்றுகிரகவாசிகளால் இந்த நெருப்பு வளைய பகுதியில் நில நடுக்கம் மற்றும் எரிமலை நிகழ்வுகளை தொடர்ந்து உருவாக்கி தங்கள் இருப்பை பூமிவாசிகள் அறியாத வண்ணம் அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எப்போதுமே ஒரு அபாயம் உருவாக்கிகொண்டே இருக்கிறார்கள்.

உலகில் உள்ள கடல்களிலே மிகவும் ஆழமான கடல் பகுதி என்றால் அது பசிபிக் பெருங்கடல் தான். இதனை பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும் இதனுள் வாழும் வேற்றுகிரகவாசிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலகிலேயே மிகவும் உயரமான பகுதி எவெரெஸ்ட் என்றால் உலகிலேயே மிகவும் ஆழமான மற்றும் ஆபத்தான பகுதி இந்த பசிபிக் பெருங்கடல் பகுதிதான். இந்த கடல் பகுதியில் சுமார் 2550 கி.மீ நீளமும் 69 கி.மீ அகலமும் கொண்ட 'v' வடிவம் உள்ள மாபெரும் பள்ளதாக்கு கண்டுபிடிக்கபட்டது.

1957 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சில பரிசோதனை கப்பலின் உதவியுடன் இந்த பகுதியில் சுமார் 7 கீ.மி ஆழத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட போது இதுவரை வேறு எங்கும் கண்டுபிடிக்காத இன்னும் சொல்ல போனால் நம் மனித இனத்திற்க்கே புதிதான சில  வேற்று கிரகவாசிகள் உருவங்களை கண்டுள்ளனர். இருப்பினும் போதிய கருவிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லாததால் 7 கீ.மீட்டருக்கு கீழ் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.


மர்மம் நிறைந்த இந்த இடத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நவீன நீர் மூழ்கி கப்பலின் உதவியுடன் உள்ளே சென்றனர்.ஆனால் நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவர்களால் 20 நிமிடத்திற்கு மேல் உள்ள இருக்க முடியவில்லை. இருப்பினும் அந்த குறைந்த நேரத்தில் பல வேற்று கிரகவாசிகளை கண்டத்துடன் பல ராட்சச வடிவிலான பறக்கும் தட்டு களையும் கண்டுள்ளனர். ஆனால் அது சில வினாடிக்குள் காணாமல் போனதால் அது என்ன என்று அவர்களால் தெளிவாக கூறமுடியவில்லை.

பசிபிக் ரிம் ஹாலிவுட் படம் பார்த்திருப்பிர்கள். பசிபிக் கடல் பகுதியில் உருவாகும் பிளவிலிருந்து வெளிவரும் மிக பிரம்மாண்டமான மிருகம் உலகை அழிக்கப்பார்க்கிறது. கைஜு எனப்படும் இந்த மிருகத்தை அழிக்க, ஏகர்ஸ் எனப்படும் மிகப் பிரம்மாண்டமான ரோபோக்களை உருவாக்குகிறார்கள். இந்த ரோபோக்களை இயக்கும் இரண்டு பைலட்டுகள் உயிரைக் கொடுத்து உலகைக் காப்பாற்றுவதோடு முடியும் படம். இது கிட்டத்தட்ட பசிபிகின் V வடிவ பள்ளதாக்கில் ஆய்வாளர்கள் கண்ட வேற்றுகிரகவாசிகள் பற்றி கதைதான்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில்
பசிபிக் கடல் பகுதியில் இருந்த பிளவு மூடப்பட்டுவிட்டதால் ராட்சத மிருகம் குறித்த அச்சமின்றி இருந்த நிலையில், ஒரு மோசமான விஞ்ஞானி தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால் மீண்டும் அந்த மிருகங்களை கட்டவிழ்த்துவிடுகிறார். அவற்றைச் சமாளிக்க மீண்டும் ஏகர்ஸ் எனப்படும் ராட்சத ரோபாக்களைக் களமிறக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுவும் எதிர்காலத்தில் ஏதோ ஒரு நடக்கும் சம்பவத்தை மறைமுகமாக மக்களுக்கு தெரிவிப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch explorer ) வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன.

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது. இந்த சிலைகள் தமது கடவுளான வேற்றுகிரகவாசிகளுக்கு இவர்கள் நிறுவியிருக்கலாம்
வேற்றுகிரகவாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருக்கவேண்டும் என நம்புகின்றனர்.

ஆக நாம் வேற்றுகிரகவாசிகளை விண்வெளியில் தேடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் நம் கடல்பகுதியில் தங்கள் இருப்பை உருவாக்கி உள்ளனர். மேலும் நாம் முன்பே பார்த்தோம் இவர்களின் பறக்கும் தட்டுகளின் பிரதான எரிபொருளே நமது நீலத் தங்கம் எனப்படும் தண்ணீர் தான்.

ஆனால் இந்த உண்மைகளை வெளிஉலகிற்கு தெரியாத வண்ணம்
வேற்றுகிரகவாசிகளிடம் தொடர்பில் உள்ள ரகசிய சமூகம் மறைத்து வருகிறது. ஏனினும் உண்மை வெளிவந்த கொண்டுதான் இருக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.