26/09/2018

இறந்தவர் கணவர் என தெரியாமலேயே சிகிச்சை அளித்த நர்ஸ்.. மோதிரத்தை வைத்து அடையாளம் கண்டு கதறி அழுதார்...


சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சீனிவாசன் நேற்று மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது பைக்கை சாலை ஓரம் நிறுத்தி போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சீனிவாசன் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகத்தில் அதிக அளவில் ரத்தம் இருந்ததால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

சீனிவாசனுக்கு அவரது மனைவி சிவகாமி மற்றும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது சிவகாமி சீனிவாசனின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து சந்தேகத்தில் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்தபோது அவது தனது கணவர் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தனது கணவரின் உடலை கட்டிப்பிடித்து அழுதது காண்போரை நெஞ்சம் உருக்குவதாக இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.