13/04/2017

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகப் போவதாக வந்த தகவல் குறித்து டி.டி.வி தினகரன் விளக்கம்...


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும், வேட்பாளராக களமிறங்குவேன் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வி என்பவரின் மகன் வெங்கட் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று டி.டி.வி. தினகரன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக அம்மா அணி சார்பாக மீண்டும் நானே போட்டியிடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் தினகரன் குறிப்பிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.